சிலுவையில் நின்று பாய்ந்தோடும் இரத்தம்

Siluvaiyil Nintru Paainthodum Rattham

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

சிலுவையில் நின்று பாய்ந்தோடும்
இரத்தம் உன்னோடு பேசலையா --(2)
அன்பர் இயேசு உனக்காக பரிதாபமாக
தொங்கிடும் காட்சி காணலையா - சிலுவையில்

கோரமாம் சிலுவையை சுமந்து சென்று
குருதியும் வடியுதே சிரசினின்று --(2)
உன் பாவம் போக்கவே தம்மையே தந்தார் --(2)
உனக்காக புது வாழ்வை அவரே ஈந்தார் --(2) -சிலுவையில்

சிலுவையின் காட்சியைக் கண்ட நீயும்
இயேசுவின் தழும்பினால் குணமடைவாய் --(2)
அவரை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்வாயா --(2)
அதனாலே புது வாழ்வை நீ பெறுவாயா --(2) -சிலுவையில்