பாஸ்கா உணவினை அருந்திட

Pasca Unavai Arunthida

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

பாஸ்கா உணவினை அருந்திட சீடரோடு இயேசு வந்து
பந்தியிலே அமர்ந்திருந்தார்
தம் மேலாடை களைந்து இடுப்பினில் துண்டைக் கட்டி
சீடரிடம் எழுந்து வந்தார்

குவளையில் தண்ணீர் மொண்டு சீடர்களின் பாதம் தொட்டு
கழுவியே துடைத்து விட்டார் பணி வாழ்வின் பெருமை சொன்னார்

சீமோன் இராயப்பரை நாடி வந்து பாதங்களைக் கழுவிட
இயேசு வந்த நேரத்திலே
இராயப்பரோ பாதங்களை இயேசுவிடம் காட்டாது
உரிமையில் கடிந்து கொண்டார்

என்னுடைய பாதங்களை என் ஆண்டவர் கழுவுவதா
ஒருபோதும் அனுமதியேன் ஒரு காலும் சம்மதியேன்

நான் செய்வது இன்னதென்று இப்போது புரியாது
பின்னரே புரிந்து கொள்வாய்
உன் பாதம் கழுவிட அனுமதியாவிடில்
என்னோடு பங்கில்லை

ஆண்டவரே போதகரே என் கால்களை மட்டுமல்ல
என் கைகளை தலையையுமே முழுவதும் கழுவி விடும்

முழுவதும் குளித்தவன் கால் மட்டும் கழுவினால்
போதுமென்று அறியாயோ ?
நான் செய்வதன் அர்த்தம் என்னவென்று உமக்கு
இந்நேரம் புரியாதோ ?

நான் ஆண்டவர் போதகர் தான் முன் மாதிரி காட்டுகிறேன்
நீங்கள் ஒருவர் ஒருவரது பாதங்களைக் கழுவுங்கள்

இயேசு சொன்ன வார்த்தைகளை மனதில் இருத்தி
நாமும் வாழ்ந்திடுவோம்
பிறர் பணி செய்து வாழ்வதே நம் வாழ்வின் கடமை
சீடரின் தகுதியென்போம் (2) - 3