நான் பாவி ஐயா

Naan Paavi Aiya

Johnsam Joyson

Writer/Singer

Johnsam Joyson

நான் பாவி ஐயா
என்னை தள்ளாதிரும்
உம் தயவால் என்னை
மீண்டும் சேர்த்துக் கொள்ளும் - 2

அணைக்கும் அன்பை அறிந்த பின்பும்
தூரம் போனேனே
அழைத்தவரே உம்மை மிகவும்
வருந்த வைத்தேனே
- நான் பாவி ஐயா

கிருபையாய் தந்த இரட்சிப்பை
நான் எண்ணாமல் போனேனே
இரத்தம் சிந்தி மீட்டதை நான்
மறந்து விட்டேனே
- நான் பாவி ஐயா