கன்மலையே கர்த்தாவே நீர் செய்த நன்மைகள் ஆயிரம்

Kanmalaye Karthave

Johnsam Joyson

Writer/Singer

Johnsam Joyson

கன்மலையே கர்த்தாவே
நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை எண்ணியே நன்றி சொல்வேன்
கண்மணி போல் காப்பவரே
அனுதினமும் என்னை நடத்தும்
உம் நல்ல வார்த்தைகள் தந்தீர்
வாழ்வின் பாதை இதுவே என்றீர்
கரம் பிடித்தே நடத்தினீர்-2

பலவீன நேரத்திலும்
பரிகாரியானவரே
எல்லா இக்கட்டு நேரத்திலும்
துணையாக நின்றவரே-2
உளையான சேற்றில் நின்று
என்னை தூக்கி எடுத்தவர் நீரே
உந்தன் மாறா அன்புக்கீடாய்
வேறொன்றும் இல்லையே-கன்மலையே