உன்னதரே என் நேசரே

Unnathare En Nesare

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

உன்னதரே என் நேசரே உமது
பேரன்பினால் அசைவுராதிருப்பேன்

முழு மனத்தோடு நன்றி சொல்வேன்
முகமலர்ந்து நன்றி சொல்வேன்
கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே
ஆத்துமா வாழ பெலன் தந்தீரே

உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்
நலிந்தோரைக் கண்ணோக்கிப்
பார்க்கின்றீர்
துன்பத்தின் நடுவே நடந்தாலும்
துரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர்

வலது கரத்தால் காப்பாற்றினீர்
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்
எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்
என்றும் உள்ளது உமது அன்பு

உந்தன் நினைவில் அகமகிழ்வேன்
நீர் தந்த வெற்றியில் களிகூருவேன்
மனதின் ஏக்கங்கள் மலரச்செய்தீர்
வாய் விட்டு கேட்டதை மறுக்கவில்லை