நானே வழி நானே

Naane Vazhi Naane Sathyam

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

நானே வழி நானே சத்தியம்
நானே ஜீவன் மகனே(ளே)-உனக்கு
என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை
என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை

1. நான் தருவேன் உனக்கு சமாதானம்
நான் தருவேன் உனக்கு சந்தோஷம்
கலங்காதே என் மகனே
கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்

2. உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்
உனக்காக திருஇரத்தம் நான் சிந்தினேன்
என் மகனே வருவாயா
இதயத்தில் இடம் தருவாயா

3. உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்
உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன்
வருவாயா என் மகனே
இதயத்திலே இடம் தருவாயா

4. நீ நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்
கலங்காதே என் மகனே
கண்மணிபோல உன்னைக் காத்திடுவேன்