கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு

Karthar mel barathai

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans



கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு
கலங்கித் தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்

நீதிமான் தள்ளாட விடமாட்டார்
நித்தமும் காத்து நடத்திடுவார்

நம்மைக் காக்கும் தேவனவர்
நமது நிழலாய் இருக்கின்றவர்

தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
அவரே நம்மை அணைத்துக் கொள்வார்

கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
நமக்கு எதிராய் நிற்பவன் யார்?

வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம்
அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்

என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்