எப்பொழுது உம் சந்நிதியில்

Eppozhuthu Um Sannithiyil

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans


எப்பொழுது உம் சந்நிதியில்
வந்து நிற்பேன்
தாகமாயிருக்கின்றேன்

ஜீவனுள்ள தேவன்மேலே
தாகமாயிருக்கின்றேன்
அதிகமாய் துதிக்கின்றேன்
தாகமாயிருக்கின்றேன்

தண்ணீருக்காய் மானானது
தாகம் கொள்வதுபோல்
என் ஆன்மா உம்மைத்தானே
தேடித் தவிக்கிறது

இரட்சகரே உம் வருகையிலே
நிச்சயமாய் உம்முகம் காண்பேன்
தாகமாய் இருக்கின்றேன்
அதிகமாய் துதிக்கின்றேன் - எப்பொழுது

ஆத்துமாவே நீ கலங்குவதேன்
சோர்ந்து போவது ஏன்
கர்த்தரையே நம்பியிரு
அவர் செயல்கள்
நினைத்துத் துதி - இரட்சகரே

காலைதோறும் உம்பேரன்பைக்
கட்டளையிடுகிறீர்
இரவுபகல் உம் துதிப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது