என் கன்மலையும் மீட்பருமான

En Kanmalaiyum Meetparumana

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே
என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2

1. துணிகர பாவ கிரியை
மேற்கொள்ள முடியாது – 2
வசனம் தியானிப்பதால்
வாழ்வேன் பரிசுத்தமாய் – 2

இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே – 2 – என் கன்மலையும்

2. வார்த்தையின் வல்லமையால்
உயிர்ப்பிக்கப்படுகின்றேன் – உம்
பாதையில் நடப்பதினால்
ஞானம் பெறுகின்றேன் – உம்

3. இதயம் மகிழ்கின்றது
வசனம் உட்கொள்வதால் – உம்
கண்கள் மிளிர்கின்றன
வார்த்தையின் வெளிச்சத்தினால் – உம்

4. தங்கம் பொன்னைவிட
அதிகமாய் விரும்புகிறேன் – 2
தேனின் சுவையை விட
சுவைத்து மகிழ்கின்றேன் – 2

5. வாயின் சொற்களினால்
எச்சரிக்கப்படுகின்றேன் – உம்
கைக்கொண்டு வாழ்வதினால்
மிகுந்த பலனுண்டு