நெஞ்சே நீ கலங்காதே

Nenje Nee Kalangadhey

Dr. D.G.S Dhinakaran

Writer/Singer

Dr. D.G.S Dhinakaran

நெஞ்சே நீ கலங்காதே
சீயோன் மலையின்
ரட்சகனை மறவாதே
நான் என் செய்வேனென்று
நெஞ்சே நீ கலங்காதே
வஞ்சர் பகை செய்தாலும்
வாரா வினை பெய்தாலும்
நெஞ்சே நீ கலங்காதே

வினைமேல் வினை வந்தாலும்
பெண்சாதிப் பிள்ளை
பித்துரு சத்ரு ஆனாலும்
மனையோடு கொள்ளை போனாலும்
வானம் இடிந்து வீழ்ந்தாலும்
நெஞ்சே நீ கலங்காதே

பட்டயம், பஞ்சம் வந்தாலும்
அதிகமான
பாடு நோவு மிகுந்தாலும்
மட்டிலா வறுமைப் பட்டாலும்
மனுஷர் எல்லாம் கைவிட்டாலும்
நெஞ்சே நீ கலங்காதே

கள்ளன் என்று பிடித்தாலும்
விலங்கு போட்டு
காவலில் வைத்தடித்தாலும்
வெள்ளம் புரண்டு தலைமீதில்
சீறி அலை மோதினாலும்
நெஞ்சே நீ கலங்காதே
சீயோன் மலையின்
ரட்சகனை மறவாதே
நான் என் செய்வேனென்று
நெஞ்சே நீ கலங்காதே