நெஞ்சே நீ கலங்காதே; – சீயோன் மலையின்

Nenjame Nee Kalangathe Seyon Malaiyin

Dr. D.G.S Dhinakaran

Writer/Singer

Dr. D.G.S Dhinakaran


Nenjame Nee Kalangathe Seyon Malaiyin

நெஞ்சே நீ கலங்காதே; – சீயோன் மலையின்
இரட்சகனை மறவாதே; – நான் என் செய்வேனென்று.

அனுபல்லவி

வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் — நெஞ்சே

சரணங்கள்

1. பட்டயம், பஞ்சம் வந்தாலும், – அதிகமான
பாடு நோவு மிகுந்தாலும்,
மட்டிலா வறுமைப் பட்டாலும்,
மனுஷர் எல்லாம் கைவிட்டாலும் — நெஞ்சே

2. சின்னத்தனம் எண்ணினாலும் – நீ நன்மை செய்யத்
தீமை பிறர் பண்ணினாலும்
பின்னபேதகம் சொன்னாலும்,
வந்தணாப்பினாலும் — நெஞ்சே

3. கள்ளன் என்று பிடித்தாலும், – விலங்கு போட்டுக்
காவலில் வைத் தடித்தாலும்,
வெள்ளம் புரண்டு தலை மீதில்
அலைமொதினாலும் — நெஞ்சே