நிழல் தேடி அலைகின்ற நெஞ்சங்களே

Nilal teti alaikinra nencankaḷe

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

நிழல் தேடி அலைகின்ற நெஞ்சங்களே
இளைப்பாற இடமுண்டு வாருங்களே அது அன்பாலயம் நல்ல பண்பாலயம்
நம் சரணாலயம் அது தேவாலயம் 2

பூப்போன்ற ஒரு வாசம் விசுவாசமே
பொன் போன்ற மனம் தன்னில் உருவாகுமே 2
விசுவாசமாய் நாம் வேண்டினால்
வழிகளைத் தருபவர் நம் யேசுவே

வாழ்வென்று துணையென்று நாம் நாடினோம்
வாழ்வாகி வழியாகி எமைத் தேற்றினாய் 2
நாம் வாழவும் நாம் செல்லவும்
வழிகளைத் தருபவர் நம் யேசுவே